தினமணி 27.08.2009
ராமநாதபுரத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க முன்னேற்பாடு
ராமநாதபுரம், ஆக. 26: ராமநாதபுரம் நகரில் மழைநீர் தேங்காமல் இருக்கத் தேவையான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
கேணிக்கரை, கிடாவெட்டி ஊரணி, சின்னக்கடை, குமரய்யா கோயில் தெரு, பாம்பூரணி, நாகநாதபுரம், சக்கரக்கோட்டை, சிவஞானபுரம், நேரு நகர் ஆகிய பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர் அவர், இப்பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு தேவையான முன்னேற்பாட்டுப் பணிகளை விரைந்து செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். ஆய்வின்போது, ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் ஜே.கே. ரித்தீஷ், வருவாய் கோட்டாட்சியர் து. இளங்கோ, வட்டாட்சியர் இந்திரஜித், நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.