தினகரன் 26.11.2010
நெல்லை மாநகராட்சிக்கு குத்தகை செலுத்தாத கடைக்கு சீல்
நெல்லை, நவ. 26: நெல்லை மாநகராட்சி பாளை மண்டலத்திற்கு உட்பட்ட மாநகராட்சி கடைகளில் நிலுவை குத்தகை தொகைகளை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கடந்த சில வருடங்களாக குத்தகை தொகை செலுத் தாதை மகாராஜநகர் கால னியில் உள்ள ஒரு கடையை பாளை மண்டல உதவி ஆணையர் பாஸ்கர் அறிவுரையின்படி உதவி வருவாய் அலுவலர் வெங்கட்ராமன் தலைமையில் கருணாகரன், அனந்தகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன் அடங்கிய குழு வினர், அப்பகுதி விஏஒ மற் றும் தலையாரி முன்னிலை யில் கடையை பூட்டி சீல் வைத்து கையகப்படுத்தினர்.
குத்தகை நிபந்தனைகளின்படி நடப்பு மாதம் வரை குத்தகை தொகை செலுத்தாத கடைகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி மாநகராட்சியால் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தகவ லை பாளை மண்டல உதவி ஆணையர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.