தினகரன் 30.11.2010
செப்டிக் டேங்க் கழிவு அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
நாகை
, நவ. 30: நாகை நகராட்சிக்குட்பட்ட நாகூர் மற்றும் நாகை பகுதிகளில் கட்டிட உரிமையாளர்கள் செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுவிக்கப்பட்டு உள்ளது.மேலும் நாகூர் மற்றும் நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை கட்டிடங்கள்
, திரையரங்குகள், வீடுகள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், திரு மண மண்டபங்கள் ஆகியவற்றில் உள்ள செப்டிக் டேங்குகளில் கழிவுநீர் நிரம்பி விட்டால் அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படு த்துவது தடை செய்யப்பட்டு உள்ளது.முறையாக நகராட்சிக்கு விண்ணப்பித்து உரிய கட்ட ணம் செலுத்தி நகரா ட்சி கழிவுநீர் மோட்டார் வாக னம் மூலமாகவே அகற்றிக்கொள்ள வேண்டும்
. யாரே னும் கழீவுநீர் தொட்டிகளு க்குள் மனிதர்களை இறக்கி கழிவுநீரை அகற்று வது கண்டறியப்பட்டால் கட் டிட உரிமையாளர் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மனிதர்களை கொண்டு கழிவுநீரை அகற்றுவதை யாராவது பார்த்தால்
, உடனடியாக நகராட்சிக்கு 04365 248061 என்ற தொ லைபேசி எண்ணை தொட ர்பு கொண்டு தெரிவிக்கலாம். இத்தகவலை நாகை நகராட்சி ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.