Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரி செலுத்தாத கட்டிடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினகரன்            01.12.2010

வரி செலுத்தாத கட்டிடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

நெல்லை, டிச.1: தச்சை மண்டல அலு வலக பகுதிகளில் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்ட ணம் செலுத்தாமல், நிலுவை வைத்துள்ள கட்டிடங்கள் மீது மாநகராட்சி அதிகாரி கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தச் சை மண்டல உதவி கமிஷ னர் சாமுவேல் செல்வராஜ் தலைமையில் உதவி வரு வாய் அலுவலர் பரமசிவன், வருவாய் உதவியாளர்கள் முத்துராமலிங்கம், கோபாலகிருஷ்ணன், வேலாயுதம் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் அடங்கிய குழு 54,55 வார்டுகளில் வரி பாக்கி கணக்கெடுத் தது.

இதில் டவுன் நேதாஜி சாலை, பருவதசிங்கராஜா தெரு, திருநீலகண்டர் தெரு ஆகிய இடங்களில் 3 ஆண்டுகளாக வரிபாக்கி வைத்திருந்த 4 கட்டிடங்களில் குடி நீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் முடிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள கட்டிடங்கள் மீது ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.