தினகரன் 06.12.2010
அனுமதியின்றி கட்டிடம் 7 பேர் மீது நடவடிக்கை மாநகராட்சி அதிரடிபுதுடெல்லி
, டிச.6: லட்சுமி நகர் லலிதாபார்க் அருகே இருந்த 4 மாடிக் கட்டிடத்தில் மாநகராட்சி அனுமதி இல்லாமல் 5வது மாடி கட்டப்பட்டது. சமீபத்தில் பெய்த பலத்த மழையால் அந்த கட்டிடத்தின் அருகே மழை நீர் தேங்கியது.இதனால் அதன் அஸ்திவாரம் பலவீனம் அடைந்து கட்டிடம் இடிந்தது
. இந்த விபத்தில் சிக்கி 70 பேர் உயிரிழந்தனர்.அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள ஆபத்தான கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி கிங்ஸ்வே கேம்ப், சிவில் லைன்ஸ், மகேந்திரு என்கிளேவ், ஆதர்ஸ் நகர் மற்றும் ராணாபிரதாப் பாக் ஆகிய பகுதிகளில் அனுமதி இல்லாமல் கட்டபட்டு இருந்த 24 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. நஜாப்கர் மண்டலத்தில் உள்ள மகிபால்பூர், மகிபால்பூர் விரிவாக்கம், சாத் நகர், சாவ்லா மற்றும் விடாஸ்டா ஆகிய இடங்களில் இருந்த 7 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த கட்டிடங்களை கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி தீர்மானித்துள்ளது. அதன்படி கட்டிடத்தை கட்டிய 7 பேருக்கு சார்பில் விளக்கம் கேட்டு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.