Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடைகளில் அதிரடி சோதனை பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினகரன்                 06.12.2010

கடைகளில் அதிரடி சோதனை பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

உத்தமபாளையம், டிச. 6: உத்தமபாளையத்தில் உள்ள ஓட்டல், டீக்கடைகளில் சுகாதாரத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். தடையை மீறி பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் தங்கள் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், இயற்கையான மண்வளம், நீர்வளம் கெட்டு விடுகிறது என்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

உத்தமபாளையத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. தடையை மீறுவோர் மீது ரூ.500 முதல் ரூ.5ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேசன், சுகாதார அதிகாரி முருகானந்தம் மற்றும் சுகாதாரத்துறையினர் நேற்று உத்தமபாளையத்தில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். தடையை மீறி பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேசன் கூறும்போது, உத்தமபாளையத்தில் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், டீக்கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மீறி பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். இதுபோன்ற சோதனைகள் தொடரும், என்றார்.