தினகரன் 07.12.2010
பாதாளசாக்கடை சுத்தம் செய்ய தொழிலாளர்களை பயன்படுத்தகூடாது மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
திருப்பூர், டிச. 7: பாதாள சாக்கடை மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணிக்கு தொழிலாளர்களை பயன்படுத்தக் கூடாது என திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் ஜெயலட்சுமி விடுத்துள்ள அறிக்கை:
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு படியும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளபடியும் மனித தொழிலாளர்களை பாதாள சாக்கடை சுத்தப்படுத்தும் பணி மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணிக்கு ஈடுபடுத்த அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
செப்டிக் டேங்க் மற்றும் பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழி சுத்தம் செய்யும் போது அபாயகரமான நச்சு வாயு வெளியேறும் என்பதால் பொதுமக்கள் இப்பணிக்கு உரிய இயந்திரங்களை ஜெட்ராடிங் மெசின், 1397904493 சில்டிங் மெசின், மொபைல் மெக்கானிக்கல் பம்ப்ஸ் மற்றும் இது சம்பந்தப்பட்ட மெஷின்களை பயன்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை குழாய் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் திருமண மண்டபங்கள் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள், மாட்டுத் தொழுவங்கள் ஆகியவற்றிலிருந்து திடப்பொருள்களை பாதாள சாக்கடைக்குள் கலக்கக் கூடாது.
அதன்படி வரும் திடப்பொருள்களை சேம்பர் அமைத்து பாதாள சாக்கடை குழாயில் கலக்கவிடாமல் தடுக்கப்பட வேண்டும். மேலும் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், மழை நீர் வடிகால்களுடன் இணைக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.