Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பணிகள் தரம் ஆய்வு: கோவை மாநகராட்சி புதிய திட்டம்

Print PDF

தினகரன்                     10.12.2010

பணிகள் தரம் ஆய்வு: கோவை மாநகராட்சி புதிய திட்டம்

கோவை, டிச. 10: கோவை மாநகராட்சி சார்பில் பல கோடி ரூபாய்க்கு திட்டப் பணிகள் நடக்கிறது. பணி யின் தரம் தொடர்பாக அடிக்கடி புகார்கள் எழுகின்றன. இதை, ஆய்வு செய்ய நேர்மையான, தொழில்நுட்பம் தெரிந்தவர்கள்தேவை என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பணிகளை அரசு பொறி யியல் கல்லூரி பேராசிரியர் கள் குழு அடிக்கடி ஆய்வு செய்து அந்த விவரங்கள் மாநகராட்சி உயரதிகாரிகளி டம் ஒப்படைக்கப்பட்டு வந் தது. ஆய்வறிக்கைக்கு பின் னரே, பில் தொகை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பி.எஸ்.ஜி, குமரகுரு, கற்பகம், ஸ்ரீகிருஷ் ணா, வி.எல்.பி போன்ற தனியார் கல்லூரிகளின் கட்டிடத் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய தனிக்குழுவை மாநகராட்சி ஏற்படுத்தியுள் ளது. குழுவுக்கு மாநகராட்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ரூ377.17 கோடி பாதாளச் சாக்கடை திட்டப்பணி, ரூ180 கோடி மழை நீர் வடிகால் பணிகளை குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர். ஆய்வறிக்கை ரகசியமாக வைக்கப்படும். மாநகராட்சி கமிஷனர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்திற்கு ஆய்வு விவரங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

ஆய்வில், முறைகேடு நடப்பதும், பணியின் தரம் குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள், ஒப்பந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணியின் தரம் குறை வாக இருந்தால், ஒப்பந்த நிறுவனங்களுக்கு பில் வழங்க தடை விதிக்கப்படும். ஒப்பந்த பணிக்காக பெறப்பட்ட முன்வைப்பு தொகை யை பறிமுதல் செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.