Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கிச்சடியில் புழுக்கள் அறிக்கை சமர்ப்பிக்க மாநகராட்சி உத்தரவு

Print PDF

தினகரன்               10.12.2010

கிச்சடியில் புழுக்கள் அறிக்கை சமர்ப்பிக்க மாநகராட்சி உத்தரவு

மும்பை, டிச. 10: கிச்சடியில் புழுக்கள் இருந்தது பற்றி விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தேவ்னாரில் உள்ள மாநகராட்சி உருது பள்ளியில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட கிச்சடியில் புழுக்கள் இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாநகராட்சியின் கல்வி குழு தலைவர் ருக்மிணி பள்ளிக்கு ஆய்வு நடத்த சென்ற போது மாணவர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த கிச்சடியில் புழுக்கள் இருப்பதை கண்டார்.

பள்ளிமாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் இந்த பள்ளியில் படிக்கும் சுமார் 1250 குழந்தைகளுக்கு பூஜா மகிளா மண்டல் என்ற அமைப்பு கிச்சடி சப்ளை செய்து வருகிறது. மாணவர்கள் இந்த கிச்சடியை சாப்பிட்டிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் கிச்சடியில் புழுக்கள் கிடந்தது பற்றி விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி துறை அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இன்னும் 2 நாட்களுக்குள் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.