Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பூங்கா இடத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை: கமிஷனர் அறிவிப்பு

Print PDF

தினமலர்      16.12.2010

பூங்கா இடத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை: கமிஷனர் அறிவிப்பு

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு நகரில் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி கமிஷனர் சுப்புராஜ் தெரிவித்தார். செங்கல்பட்டு நகராட்சி கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. நகராட்சி தலைவர் ஜெயா தலைமை தாங்கினார். கூட்டத்தில், நகரில் உள்ள பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பூங்காவிற்கென ஒதுக்கப்பட்ட இடத்தை, வேறு உபயோகத்திற்கு பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பூங்காவிற்காக தான் பயன்படுத்த வேண்டும். மற்ற நகர்களில் தப்பு நடந்திருந்தால் அப்போதைய கமிஷனர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எனவே, கோப்புகளை மறு ஆய்வு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே கட்டியது சட்டப்படி தப்பாக இருந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, கமிஷனர் பதில் அளித்தார்.