Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 43 லட்சம் வரி பாக்கி 10 வீடு, வர்த்தக நிறுவனத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினகரன்        27.12.2010

ரூ. 43 லட்சம் வரி பாக்கி 10 வீடு, வர்த்தக நிறுவனத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

காஞ்சிபுரம், டிச.27:

குடிநீர் வரி மற்றும் இணைப்பு கட்டணத்தை 5 ஆண்டுகளாக செலுத்தாத 10 வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் நகராட்சியில் வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு குழாய் மூலம் இணைப்பு கொடுக்கப்பட்டு பாலாற்று குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதில் ஒரு சிலர் கடந்த 5 ஆண்டுகளாக வரி மற்றும் இணைப்பு கட்டணம் செலுத்தாமல் ரூ. 43 லட்சம் பாக்கி வைத்திருந்தனர். அவர்களிடம் வரி மற்றும் கட்டணத்தை வசூலிக்குமாறு நகராட்சி இயக்குநரகம் உத்தரவிட்டது.

அதன்படி, நகராட்சி ஆணையர் மோகன் உத்தரவின் பேரில், நகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம், வரைவாளர் சிவா, குழாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், பொறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்ட குழுவினர், நகராட்சி பகுதியில் வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் 10க்கும் மேற்பட்ட வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வரி மற்றும் இணைப்பு கட்டணம் செலுத்தாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவற்றின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். இதுதொடர்பாக, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகராட்சி அதிரடி நடவடிக்கை.