Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 5 மோட்டார்கள் பறிமுதல்

Print PDF

தினமணி              01.07.2011

குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 5 மோட்டார்கள் பறிமுதல்

கோவில்பட்டி, ஜூன் 30: கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 5 மோட்டார்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சில பகுதிகளில் மின் மோட்டார் பயன்படுத்தி, குடிநீர் உறிஞ்சப்படுவதாக நகராட்சி ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்புலட்சுமி, உதவி பொறியாளர் சண்முகநாதன் மற்றும் ஊழியர்கள் 32-வது வார்டுக்கு உள்பட்ட பாரதி நகர் வடக்குத் தெரு மற்றும் 11-வது வார்டுக்கு உள்பட்ட பங்களாத் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகத்தின் போது திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சிய 5 மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தனர்.

இதுபோன்ற ஆய்வு அனைத்து வார்டுகளிலும் தொடர்ந்து நடைபெறும் என்றும், மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சி எடுத்தால் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதோடு, கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எச்சரித்தார்.