தினமலர் 28.07.2012
பள்ளி அருகே சிகரெட்: கடைகளுக்கு அபராதம்
வத்தலக்குண்டு:சுகாதாரபணிகள் துணை இயக்குநர் சுப்பிரமணி உத்தரவுப்படி வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி பேரூராட்சிகளில் ஆய்வு நடந்தது. பள்ளி அருகே உள்ள கடைகளில் சிகரெட் விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறி சிகரெட் விளம்பரங்கள் வைத்திருந்த கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. துணை இயக்குநர் நேர்முக உதவியாளர் அப்துல்பாரி, வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் ஆய்வு செய்தனர்.சுகாதார மேற்பார்வையாளர் சேகர், ஆய்வாளர்கள் செல்வகுமார்,மணிகண்டன், ஜான்பீட்டர் உடனிருந்தனர்.