Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வார்டு பணிகளை மாநகராட்சிகமிஷனர் திடீர் ஆய்வு

Print PDF

தினமலர்     23.08.2012

வார்டு பணிகளை மாநகராட்சிகமிஷனர் திடீர் ஆய்வு

மதுரை:மதுரை மாநகராட்சியில் வார்டுகளில் நடக்கும் பணிகளை, பிற அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் நேற்று காலை கமிஷனர் நந்தகோபால், தனி நபராக சென்று ஆய்வு செய்தார்.மாநகராட்சியில் 24, 25, 26 வார்டுகளுக்கு உட்பட்ட பரசுராம்பட்டி, கண்ணனேந்தல் பகுதிகளுக்கு கமிஷனர் சென்றார். அங்கு துப்புரவு பணிகளை ஆய்வு செய்தார். மூன்று வார்டுகளிலும் துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவு நோட்டுக்களை பார்வையிட்டார். சிலர் பணிக்கு வராமலும், சிலர் விடுப்பு எடுத்து விட்டு, அதற்கான கடிதம் வைத்துள்ளதும் தெரிந்தது.அப்பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை அகற்றி வேறிடத்தில் போடாமல் வெள்ளக்கல்லுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார். செல்லூர் நாய்கள் கருத்தடை அலுவலகம் சென்றார். கருத்தடை பணியை செப்., முதல் தேதியில் இருந்து துவங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.