Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆழ்துளை கிணறு அமைச்சர் ஆய்வு

Print PDF

தினமலர்          05.09.2012

ஆழ்துளை கிணறு அமைச்சர் ஆய்வு

பள்ளிபாளையம்: படைவீடு டவுன் பஞ்சாயத்தில் மேற்கொள்ளப்படும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை, தொழில் துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

படைவீடு டவுன் பஞ்சாயத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆறு இடங்களில், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பணியை, அமைச்சர் தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை துரிதமாக முடிக்கும்படி, பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. டவுன் பஞ்சாயத்து சேர்மன் ஜெகநாதன், செயல் அலுவலர் சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.