Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர், கழிவுநீர் பிரச்னை இன்று புகார் தரலாம்

Print PDF
தினகரன்                  09.03.2013

குடிநீர், கழிவுநீர் பிரச்னை இன்று புகார் தரலாம்


சென்னை: சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் சந்திரமோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாதந்தோறும் 2வது சனிக்கிழமை நடைபெறும் திறந்தவெளி கூட்டம், இன்று காலை 10 மணி முதல் முதல் பிற்பகல் 1 மணி வரை, குடிநீர் வாரியத்தின் அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதி அலுவலகங்களில் நடக்கிறது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் மற்றும் குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள் குறித்த சந்தேகங்களை மனுக்கள் வாயிலாக விண்ணப்பித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
Last Updated on Saturday, 09 March 2013 11:11