Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வைகை ஆற்றில் வளர்ந்திருந்த ஆகாயத்தாமரைகள் அகற்றம்

Print PDF
தினகரன்                   27.03.2013

வைகை ஆற்றில் வளர்ந்திருந்த ஆகாயத்தாமரைகள் அகற்றம்


மதுரை: வைகை ஆற்றில் வளர்ந்திருந்த ஆகாயத்தாமரை செடிகளை 2 ஜேசிபி இயந்திரம் உதவியுடன் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.  

மதுரை வைகை ஆற்றில் ஓடும் கழிவுநீரால் ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் முளைத்து அதில் கொசு உற்பத்தியானது. ஆற்று கரையோரம் உள்ள பொதுமக்கள் கொசுதொல்லையால் அவதிப்பட்டனர். ஆகாயத் தாமரையை அழிப்பது பொதுப்பணித்துறை வேலையா, மாநகராட்சி வேலையா என்ற கேள்வி எழுந்தது. இதனால் பொதுமக்களே ஆகாயதாமரை செடிகளை அழிக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு எம்எல்ஏ அண்ணாத்துரை தலைமை ஏற்றார். ஒரு வார காலத்தில் ஆகாயத்தாமரை அழிக்க வேண்டும் என மாநகராட்சிக்கு கெடு விதித்தார்.

பொதுமக்கள் போராட்டம் காரணமாக ஆகாயத்தாமரை செடிகள் குறித்து மேயர் ராஜன் செல்லப்பா, மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் ஆகியோர் பார்வையிட்டு உடனே ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதனைத்தொடர்ந்து ஓபுளாப் படித்துறை முதல் குருவிக்காரன் சாலை வரையில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையை 2 ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணி துவங்கியது. இதில் 20 மாநகராட்சி பணியாளர்களும் ஈடுபட்டனர். வைகை ஆற் றில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையை முழுமை யாக அகற்றும் பணி துவங்கி நடந்து வருகிறது. இப்பணிகளை மேயர், கமிஷனர் பார்வையிட்டனர்.

பின்னர் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ஓபுளா படித்துறை கல்பாலத்தில் பழுதாகியுள்ள சாலையின் மீது புதிய சாலை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தனர். திருவிழாவிற்கு முன்பாக தார் சாலை அமைக்கும்படி உத்தரவிட்டனர். உதவி ஆணையாளர் சின்னம்மாள், நகர்நல அலு வலர் யசோதா, செயற்பொறியாளர் ராஜேந்திரன், மற்றும் கவுன்சிலர்கள் விஜயராகவன், நூர்முகமது, பொறியாளர் கனி உடனிருந்தனர்.