Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரம்பலூரில் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ஆய்வு

Print PDF
தினத்தந்தி        28.03.2013

பெரம்பலூரில் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத் தில் நடைபெற்று வரும் அனைத்து துறை திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை செயலா ளர் பணீந்திர ரெட்டி ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலு வலரும், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை செயலர் பணீந்திர ரெட்டி பல் வேறு துறைகளின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள், மக்கள் நல பணிகள் குறித்து கலெக்டர் தரேஸ் அகமது முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை பிரிவில் டயாலிஸிஸ் பிரிவு, சிசு தீவிர சிகிச்சை பிரிவு, முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத் தில் சிகிச்சை பெறும் நோயாளி களுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவை அவர் பார்வையிட் டார். அரசு மருத்துவமனையில் தரைப்பகுதிகள் அனைத்தை யும் அடிக்கடி சுத்தம் செய்ய அறிவுறுத்தினார்.

கோட்டாட்சியர் அலுவ லகத்தில் மாவட்ட மின் ஆளுமை திட்டத்தின் மூலம் கணினி மூலம் சான்றிதழ்களை பெறுவதற்கான செயல்பாடு களை அவர் ஆய்வு செய்தார். பெரம்பலூர் நகராட்சிக்குட் பட்ட ரோவர் நூற்றாண்டு வளைவு–எளம்பலூர் சாலை இணைப்பு பணியை பார்வை யிட்டார்.

விரைந்து முடிக்க அறிவுரை

பெரம்பலூர் நகராட்சியில் குடிநீர் வினியோகப் ணிக்காக உப்பு ஓடையில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடிநீர் கிணறையும், எளம்பலூர் ஊராட்சியில் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தில் கட்டப் பட்ட வீடுகளையும் அவர் ஆய்வு செய்தார். பெரம்பலூர் நகராட்சி துப்புரவு பணிகளுக் காக வாங்கப்பட்ட நவீன குப்பை சேகரிப்பு வாகனங் களையும், ரூ.31 கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக நெடுவாசல் பகுதி யில் அமைக்கப்பட்டுள்ள சுத் திகரிப்பு நிலையத்தை பார்வை யிட்ட பணீந்திர ரெட்டி இந் நிலையத்தை பசுமை வளாக மாக உருவாக்குமாறும், நகராட்சி பகுதி வீடுகளில் கழிவு நீர் அமைப்பினை, பாதாள சாக்கடையுடன் இணைக்கும் பணிகளை துரிதப்படுத்தி விரைவாக முடிக்குமாறும் அறிவுறுத்தி னார்.

வாலிகண்டபுரத்தில் அனை வருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி மாணவ– மாணவிகளுக்கான பகல் நேர பராமரிப்பு மையத்தை பார்வையிட்டு, தொண்டப் பாடி, அனுக்கூர் குடிகாடு, பிரம்மதேசம், செங்குணம், பேரளி ஆகிய பகுதிகளில் மக்காச்சோளம், பருத்தி விவ சாயிகளிடம் பயிர் விளைச்சல் பாதிப்பு குறித்து கேட்டறிந் தார்.

பின்னர் கலெக்டர் அலு வலகத்தில் அனைத்து துறை திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர் களுடன் ஆய்வு நடத்தினார்.

கலந்து கொண்டவர்கள்

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி சுப்ரமணி யன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரஸ்வதி கணேசன், கோட் டாட்சியர் ரேவதி, நகராட்சி தலைவர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.