Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உப்பிடமங்கலத்தில் பேரூராட்சி இயக்குநர் ஆய்வு

Print PDF
தினமணி        01.04.2013

உப்பிடமங்கலத்தில்  பேரூராட்சி இயக்குநர் ஆய்வு

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார்.

உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு 2012-13-ல் வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ், ரூ. 12 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதில் பாறப்பட்டு, சின்னாக்கவுண்டனூர் ஆதிதிராவிடர் தெரு, கருப்பூர், புதுக்கஞ்சமனூர், சாலப்பட்டி ஆகிய கிராமங்களில் தலா ரூ. 2 லட்சம் வீதம் மினி பவர் பம்ப், குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.

மேலும், ராஜாகவுண்டனூர், புகையிலைகுறிச்சியானூர் ஆகிய கிராமங்களில் தலா ரூ. 1 லட்சம் வீதம் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநர் செல்வராஜ் அண்மையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் தமிழரசி, உதவி நிர்வாக பொறியாளர் சாய்ரா, உதவி பொறியாளர் முரளி உள்பட பலர் உடனிருந்தனர்.
Last Updated on Monday, 01 April 2013 10:13