Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகரில் குடிநீர் புகார் தெரிவிக்க தனி பிரிவு தொடக்கம்

Print PDF
தினகரன்        03.04.2013

மாநகரில் குடிநீர் புகார் தெரிவிக்க தனி பிரிவு தொடக்கம்


திருச்சி: மாநகரில் குடிநீர் பற்றிய புகார் தெரி விக்க தனி பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இது தினமும் காலை 8 முதல் இரவு 8 வரை செயல்படும்.

திருச்சி மாவட்டம் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு தடையில்லாத குடிநீர் விநியோகிக்க குறை தீர்க்கும் பிரிவு துவங்க மாவட்ட நிர்வா கம் திட்டமிட்டது. இதன் படி திருச்சி கலெக்டர் அலுவலக வளாகம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் குடிநீர் குறைதீர்க் கும் அவசர சேவைப் பிரிவு அமைக்கப்பட்டுள் ளது. இப்பிரிவு காலை 8 முதல் இரவு 8 வரை இயங் கும். கட்டணம் இல்லா தொலைபேசியில் (0431 2411040) குடிநீர் தொடர் பான புகார்களை தெரிவிக்கலாம்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் குடிநீர் குறைதீர்க்கும் அவசர சேவைப்பிரிவும் அமைக்கப்பட்டுள் ளது. பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல் படும் குடிநீர் குறைதீர்க் கும் அவசர சேவைப்பிரிவிலும் புகார்களைத் தெரிவிக்கலாம். புகார்கள் பெறப்பட்டவுடன் நடவடிக்கை எடுத்து குடிநீர் விநியோகிக்கப்படுவது டன், நடவடிக்கை விவரம் புகார்தாரருக்கு தெரிவிக்கப்படும். இந்த தகவலை கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.

கட்டணமில்லாத தொலைபேசி வசதி இன்று முதல் அமலாகும் என கலெக்டர் அலுவலக தரப் பில் தெரிவித்தனர்.