Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேரூராட்சி கூட்டம்

Print PDF
தினமலர்          03.04.2013

பேரூராட்சி கூட்டம்


வடமதுரை:வடமதுரை பேரூராட்சி கூட்டம் தலைவர் பாப்பாத்தி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் விஜயநாத், துணைத்தலைவர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தனர்.

தம்பித்துரை எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, பேரூராட்சி 3 வது வார்டு அம்பலகாரன்பட்டியிலும், 12 வது வார்டு முனியாண்டி கோயில் அருகிலும் ஆழ்குழாய்கள் அமைத்து, குடிநீர் தொட்டிகள் நிறுவ 4 லட்ச ரூபாய்க்கு பணி செய்யவும், விலங்குகள் பிறப்பு கட்டுபடுத்துதல் மற்றும் வெறிநாய் கடி தடுப்பு திட்டத்தின் கீழ் 3 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வடமதுரையில் நாய்கள் கொட்டில் கட்டவும் ஒப்புதல் தரப்பட்டது.