Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சித்திரை பொருட்காட்சி ஆலோசனை கூட்டம்

Print PDF
தினகரன்       04.04.2013

சித்திரை பொருட்காட்சி ஆலோசனை கூட்டம்


மதுரை: மதுரை சித் திரை திருவிழாவில் அரசு சித்திரை பொருட்காட்சியை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் அன்சுல்மிஸ் ரா தலைமை வகித்து பேசியதாவது: அரசு சித்திரை பொருட்காட்சியில் தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் அனைத்து துறையினரும் அரங்குகளை அமைக்க வேண்டும்.

காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மருத்துவ குழு வினர் தயார் நிலையில் இரு க்க வேண்டும். குடிநீர் உட் பட அடிப்படை வசதி களை செய்து கொடுக்க வேண்டும். தடையின்றி மின்சாரம் வழங்க வேண் டும். மாலை 3 முதல் இரவு 10 மணி வரை பஸ்கள் பொருட்காட்சி வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். வருவாய் அலுவலர் ரவீந்திரன், துணை கமிஷனர் திருநாவுக்கரசு, ஆர்டிஓ ஆறுமுகம், கலெக்டரின் நேர்முக உதவியளர் சாந்தி, அறநிலையத்துறை ஆணையர் ஜெயராமன் கலந்து கொண்டனர்.