Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் "அம்மா' திட்டம் அமைச்சர் நாளை துவக்குகிறார்

Print PDF
தினமணி               05.04.2013

மாநகராட்சியில் "அம்மா' திட்டம் அமைச்சர் நாளை துவக்குகிறார்

மதுரை மாநகராட்சியில் அம்மா திட்டம் தொடக்க விழா ஏப்ரல் 6 ஆம் தேதி 85 ஆவது வார்டில் நடைபெறவுள்ளது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ தொடக்கி வைக்கிறார். மேயர் விவி ராசன் செல்லப்பா தலைமை வகிக்கிறார்.

இத்திட்டம் ஏப்ரல் 8 ஆம் தேதி 4, 35, 50, 80 ஆகிய வார்டுகளிலும், ஏப்ரல் 9 ஆம் தேதி 5, 36, 51, 79 ஆகிய வார்டுகளிலும், ஏப்ரல் 10 ஆம் தேதி 6, 46, 52, 81  ஆகிய வார்டுகளிலும், ஏப்ரல் 11 ஆம் தேதி 7, 27, 53, 82 ஆகிய வார்டுகளிலும், ஏப்ரல் 12 ஆம் தேதி 8, 45, 73, 84 ஆகிய வார்டுகளிலும், ஏப்ரல் 13 ஆம் தேதி 9, 44, 74, 83 ஆகிய வார்டுகளிலும் நடைபெறுகிறது.

முகாம் நாள்களில் மேற்கண்ட வார்டுகளில் குப்பை அகற்றுதல், திறவை சாக்கடை, மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல், குடிநீர் அடிகுழாய் பழுது நீக்குதல், குடிநீர் கசிவை தடுத்தல், பாதாள சாக்கடை அடைப்பை நீக்குதல், குடிநீர் தொட்டி பராமரித்தல், தெருவிளக்குப் பராமரிப்பு, கொசு ஒழிப்பு  போன்ற பணிகள் நடைபெறும் என ஆணையர் ஆர்.நந்தகோபால் தெரிவித்துள்ளார்.