Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஓமலூர் பேரூராட்சிக் கூட்டம்

Print PDF
தினமணி        06.04.2013

ஓமலூர் பேரூராட்சிக் கூட்டம்


சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சியின் சிறப்பு அவசரக் கூட்டம் அதன் தலைவர் (பொறுப்பு) ஏ.பிரகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மல்லூர் அருகேயுள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் அமைய வேண்டிய தனியார் சுங்கச் சாவடியை விதிமுறை மீறி, ஓமலூர் அருகேயுள்ள கோட்டகவுண்டம்பட்டியில் அமைந்துள்ளது.

எனவே, பேரூராட்சி பகுதியிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு சுங்கச் சாவடி அமைக்கக் கூடாது என்ற விதிமுறைப்படி, ஓமலூர் அருகே அமைந்துள்ள தனியார் சுங்கச் சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.