Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பை நகராட்சி சார்பில் கலெக்டர் வழங்கினார்

Print PDF
தினத்தந்தி        10.04.2013

திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பை நகராட்சி சார்பில் கலெக்டர் வழங்கினார்


திருவண்ணாமலை நகராட்சியில் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் ஒழிக் கும் வகையில் வியா பாரிகளுக்கு நகராட்சி சார்பில் கலெக்டர் விஜய்பிங்ளே துணி பைகளை வழங்கினார்.

பிளாஸ்டிக் தடை


திருவண்ணாமலை மாவட் டத்தில் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் வகையில் மாவட்ட நிர்வைகம் சார்பில் விழிப் புணர்வு ஊர்வலங்கள்,  துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட் டது. பின்னர் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள்சார்பில் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்தும் வியாபாரி களுக்கு அபராதம் விதிக்கப் பட்டு வருகிறது.

துணிப்பைகள்

இந்த நிலையில் திருவண் ணாமலை நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் வியாபாரிகளிடம் அதை பறி முதல் செய்துவிட்டு அதற்கு பதில் துணிப்பை வழங்கும் விழிப்புணர்வு திட்டம் நடந் தது. இதன் தொடக்கவிழா நேறறு காலை நடந்தது. திரு வண்ணாமலை காந்திசிலை அருகில் கலெக்டர் விஜய் பிங்ளே வியாபாரிகளுக்கு துணிப்பைகளை வழங்கி இந்த திட்டத்தை தொடங்கிவைத் தார்.

அபராதத்தொகையில்

திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்திய வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில்  ரூ.500, ரூ.1000 என அபராதம் விதிக்கப்பட்டது. அந்த பணத்தில் துணிப் பைகள் தயாரிக்கப்பட் டுள்ளது. நகராட்சி சார்பில் கடை களுக்கு ஆய்வுக்கு செல் லும்போது அங்கு தடைசெய் யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்தால் அதை பறிமுதல் செய்து விட்டு இந்த துணிப் பைகள் வழங்கப்படும்.

நேற்று நடந்த விழாவில் நகராட்சி தலைவர் என்.பாலச் சந்தர், ஆணையாளர் விஜய லட்சுமி, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எஸ்.ஆர்.தரும லிங்கம், பேரவை இணை செயலாளர் என்.பாண்டு, நகராட்சி என்ஜினீயர் பாஸ் கர், கவுன்சிலர்கள் ஜெ.செல் வம், பற்குணகுமார், பாலன், முருகன், போர்மன்னன் ராஜா, நகர்நல அலுவலர் ஆல்பர்ட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.