Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

2 வணிக வளாக கட்டடங்களுக்கு "சீல்'

Print PDF

தினமணி         03.05.2013

2 வணிக வளாக  கட்டடங்களுக்கு "சீல்'


விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட 2 வணிக வளாகங்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் வியாழக்கிழமை "சீல்' வைத்தனர்.

கோவை, லட்சுமி மில் சந்திப்பில் உள்ள விக்னேஸ்வர் கிரஸ்டா என்ற வணிக வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு "சீல்' வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்தார்.

கோவையில் மொத்தம் 201 கட்டடங்கள் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்திருந்தார்; மாநகராட்சிப் பகுதியில் மொத்தம் 55 கட்டடங்கள் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டது தெரியவந்தது.

கோவை மாநகராட்சி அலுவலர்கள் வியாழக்கிழமை திருச்சி சாலையிலும், சத்தி சாலையிலும் உள்ள 2 வணிக வளாகங்களுக்கு "சீல்" வைத்தனர். இதுவரை மொத்தம் 38 வணிக வளாகங்கள் "சீல்' வைக்கப்பட்டுள்ளன.