Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பள்ளிச் சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு

Print PDF
தினமணி        05.05.2013

பள்ளிச் சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு


குமாரபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை மே 6-ஆம் தேதிக்குள் அகற்றிக் கொள்ளுமாறு, சம்பந்தப்பட்டவர்களை நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

குமாரபாளயம் நகராட்சிக்குள்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது சொந்தப் பொறுப்பிலே  அகற்றிக் கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால், நகராட்சி நிர்வாகம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதுடன் அதற்கு ஆகும் செலவுத் தொகை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.

மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார்.
Last Updated on Monday, 06 May 2013 07:34