Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சியில் 4 பேருக்கு பணி நியமன ஆணைகள்

Print PDF
தினமணி        06.05.2013

நகராட்சியில் 4 பேருக்கு பணி நியமன ஆணைகள்


கரூர் நகராட்சியில் 4 பேருக்கு பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி வழங்கினார்.

கரூர் நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் நவீன பெயர் பலகைகள் அமைக்கும் விழா, மற்றும் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தலைமை வகித்தார்.

அமைச்சர் வி. செந்தில்பாலாஜி பங்கேற்று, கருணை அடிப்படையில் ஒரு அலுவலக உதவியாளர், 3 துப்புரவு பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

கரூர் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் உள்ள தெருக்களுக்கு நவீன பெயர் பலகைகளை அமைக்கும் பணியையும் தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், நகராட்சி ஆணையர் (பொ) ல. கோபாலகிருஷ்ணன், நகராட்சிப் பொறியாளர் நா. புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நகராட்சிக்குள்பட்ட 5 சாலை, பசுபதிபாளையம் ஆகியவற்றுக்கிடையே அமராவதி ஆற்றில் ரூ. 12.5 கோடியில் கட்டப்படவுள்ள உயர்நிலைப் பாலத்தின் ஆரம்ப கட்ட வேலைகளாக, ரூ. 25 லட்சத்தில் நகராட்சி குடிநீர் குழாய்கள் மற்றும் தெருவிளக்கு மின் கம்பிகளை மாற்றியமைக்கும் பணிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.