Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேரூராட்சிகளில் குறைகளை தெரிவிக்க அலைபேசி எண் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்

Print PDF
தினமலர்               07.05.2013

பேரூராட்சிகளில் குறைகளை தெரிவிக்க அலைபேசி எண் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்


தாம்பரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில், பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில், பொதுவான அலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்களில், 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 18 பேரூராட்சிகள் உள்ளன.   

இந்த பேரூராட்சிகளில் நிலவும் குறைகளை, அலுவலக தொலைபேசி எண்ணிலோ அல்லது நேரிடையாகவோ சென்று தெரிவிக்க வேண்டும்.இந்த நடைமுறையில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதால், பொதுமக்கள் தங்கள் குறைகளை துரிதமாக தெரிவிக்கும் வகையில், பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு, பொதுவான அலை பேசி எண்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த அலைபேசிகளை, பேரூராட்சி செயல் அலுவலர்கள் வைத்திருப்பர்.

பொதுமக்கள் ஏதேனும் குறைகள் குறித்து, புகார் தெரிவிக்க வேண்டும் எனில், இந்த எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். குடிநீர், மின் விளக்கு சம்பந்தமான குறைகளை, குறுஞ்செய்திகள் மூலம் தெரிவிக்கலாம். விடுமுறையிலும் இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


பேரூராட்சி அலைபேசி எண்

அச்சிறுபாக்கம்       8883100142
சிட்லப்பாக்கம்        8883100143
இடைக்கைநாடு      8883100144
கருங்குழி                8883100145
குன்றத்தூர்              8883100146
மாடம்பாக்கம்         8883100147
மாமல்லபுரம்          8883100148
மாங்காடு                8883100149
கூடுவாஞ்சேரி        8883100150
பீர்க்கண்காரணை    8883100151
பெருங்களத்தூர்      8883100152
செம்பாக்கம்            8883100153
ஸ்ரீபெரும்புதூர்        8883100154
திருநீர்மலை           8883100155
திருப்போரூர்          8883100156
திருக்கழுக்குன்றம் 8883100157
உத்திரமேரூர்         8883100158
வாலாஜாபாத்         8883100159