Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோபி நகராட்சி பகுதிகளில் குடிநீரை காய்ச்சி பயன்படுத்த வேண்டும் ஆணையாளர் வேண்டுகோள்

Print PDF
தினத்தந்தி       08.05.2013

கோபி நகராட்சி பகுதிகளில் குடிநீரை காய்ச்சி பயன்படுத்த வேண்டும் ஆணையாளர் வேண்டுகோள்


கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள செங்கலகரையின் வழியாக செல்லும் பவானி ஆற்றில் இருந்து கோபி நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது பவானிசாகர் அணையில் தண்ணீரின் இருப்பு குறைவாக உள்ளதால், அணையில் தேங்கி நிற்கும் தண்ணீர் குடிநீருக்காக திறந்துவிடப்படுகிறது. எனவே, பவானி ஆற்றில் இருந்து நகராட்சி பகுதிகளுக்கு வினியோகம் செய்யும் குடிநீரை பொதுமக்கள் காய்ச்சிப் பயன்படுத்த வேண்டும்.

இந்த தகவலை கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளர் பா.ஜான்சன் தெரிவித்து உள்ளார்.