Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிரச்னைகளை தீர்ப்பதில் மாநகராட்சி ஆர்வம் புகார் வந்தது 2433 நடவடிக்கை எடுத்தது 2127

Print PDF
தினமலர்          10.05.2013

பிரச்னைகளை தீர்ப்பதில் மாநகராட்சி ஆர்வம் புகார் வந்தது 2433 நடவடிக்கை எடுத்தது 2127


கோவை:கோவை மாநகராட்சிக்கு எஸ்.எம்.எஸ்.,சில் புகார் வந்தது 2433; அதில் நடவடிக்கை எடுத்தது 2127 என அதிகாரிகள் கூறினர். இப்பணிகளை கமிஷனர் ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சியில் தெருவிளக்கு, குடிநீர், சாக்கடை அடைப்பு, குப்பை தேக்கம் உள்ளிட்ட பொதுப்பிரச்னைகள் இருந்தால், மாநகராட்சி நிர்வாகத்திற்கு "எஸ்.எம்.எஸ்' மூலமாக தெரிவிக்க 92822 02422 என்ற மொபைல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2ம் தேதி வரையிலும், மொத்தம் 2433 "எஸ். எம்.எஸ்' புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில், 2127 புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில், "எஸ்.எம்.எஸ்' புகார் அனுப்பியவர்களிடம், மாநகராட்சி கமிஷனர் லதா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பாரதி வித்யா பவன் பள்ளி எதிரில் குப்பை உடனடியாக அகற்றப்பட்டதையும், வடவள்ளி பாரதியார் பல்கலை அருகில் குப்பை அகற்றியதையும், இடையர்பாளையம் 3வது வீதியில் சாக்கடை தூர்வாரப்பட்டதையும், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வேணுகோபால் லே-அவுட்டில் சாக்கடை அடைப்பு அகற்றப்பட்டதையும் ஆய்வு செய்தார்.

அப்போது, பொதுமக்களிடம் வீட்டிலிருந்தவாறு மாநகராட்சி நிர்வாகத்திற்கு "எஸ்.எம்.எஸ்' அனுப்பினால் போதும். அதிகாரிகள் வீடு தேடி வந்து உடனடி நடவடிக்கை எடுப்பார்கள்' என, பொதுமக்ளிடம் மாநகராட்சி கமிஷனர் லதா தெரிவித்தார்.

கமிஷனர் லதா கூறுகையில், ""மாநகராட்சியின் புகார் "எஸ்.எம்.எஸ்' முறைக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஓரிடத்தில் இருந்தே மக்களின் பிரச்னைகளை அறிந்து, நிவர்த்தி செய்ய முடிகிறது. இந்த திட்டத்தில் எந்த தொய்வும் ஏற்படாமல் கண்காணிக்கப்படும்'' என்றார்.