Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு மழைநீர் சேகரிப்பு கட்டாயம் தவறினால் குடிநீர் கிடையாது

Print PDF
தினகரன்                 15.05.2013

மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு மழைநீர் சேகரிப்பு கட்டாயம் தவறினால் குடிநீர் கிடையாது


திருச்சி, : திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம் நடைமுறை படுத்த வேண் டும். மீறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி தெரிவித்துள் ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் அரசு உத்தரவுப் படி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, கட்டங்க ளில் மழை நீர் சேகரிப்பு முறை அமைக்கப்பட்டு, செயல்பாட்டில் இருக்க வேண்டும். தற்போது நாளுக்கு நாள் நீர்மட்டம் குறைந்து வருகிறது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, ஒவ் வொரு கட்டட உரிமையா ரும் அரசு உத்தர வில் உள்ள விதிமுறைக ளின் படி, மழைநீர் சேக ரிப்பு வசதிகள் அமைத் திட வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை புதுப்பித்து, செயல் பட வைக்க வேண்டும்.

புதிதாக கட்டப்படும் கட்டடங்களுக்கு மழைநீர் சேகரிப்புக்கு முறையான வரைபடம் இல்லாமல் மாநகராட்சி அனுமதி வழங்கப்படாது. பழைய கட்டங்கள், வீடுகள், அனைத்து வணிக நிறுவன கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு முறை இருந்து, தற்போது செயல்பாட்டில் இல்லாதது தெரியவந் தால், அந்த கட்டடங்களுக்கான குடிநீர் இணை ப்பை துண்டித்து நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மாநகர மக்கள் சமூக அக்கறையுடன் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த் திட மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு கமிஷனர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.