Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க மக்கள் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டுகோள்

Print PDF
தினமலர்                 22.05.2013

பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க மக்கள் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டுகோள்


விழுப்புரம்:விழுப்புரத்தில் பாதாளசாக்காடை பணிகள் முடிவடைய பொதுமக்கள் பங்களிப்பு தொகையை விரைவாக செலுத்த வேண்டுமென சேர்மன் பாஸ்கரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.விழுப்புரம் நகராட்சியில் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு தொகை இணைந்து கடந்த 2008ம் ஆண்டு பாதாளசாக்கடை திட்ட பணிகள் துவங்கின. 35.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கிய பணிகளுக்கு, தற்போது திருந்திய நகராட்சி நிர்வாக அனுமதி மூலம் 43.36 கோடி ரூபாய் பெறப்பட்டது.
 
நகரில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து இறுதி கட்டமாக பைப் லைன்கள் பொறுத்தும் பணி நடக்கிறது. பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்தகரிப்பு செய்யப்பட்டு, ஏரி நீர் பாசனத்திற்கு வழங்க காகுப்பம், எருமனந்தாங்கலில் இரு சுத்தகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

இதில் காகுப்பத்தில் 90 சதவீதம், எருமனந்தாங்கலில் 75 சதவீதம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் முடிந்தது. தற்போது இயந்திரங்கள் பொறுத்தும் பணி நடக்கிறது. இறுதி கட்டத்தில் உள்ள பணிகளை நேற்று சேர்மன் பாஸ்கரன் பார்வையிட்டு, மீதமுள்ள பணிகளின் நிலவரங்கள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
 
கமிஷனர் ராஜேந்திரன், பொறியாளர் பார்த்தீபன், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் சாம்ராஜ் உடனிருந்தனர்.இந்த பணிகளுக்காக பொது மக்கள் பங்களிப்பு தொகை 758 லட்சம் ரூபாய் நகராட்சி சார்பில் நிர்ணயிக் கப்பட்டது. இதில் நகராட்சி மூலம் பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக 395 லட்சம் ரூபாய் பெறப் பட்டுள்ளது. மீதம் 363 லட்சம் ரூபாய் மக்களின் பங்களிப்பு தொகை பாக்கியுள்ளது. விழுப்புரம் நகரில் இறுதி கட்டத்தில் உள்ள பாதாள சாக்கடை பணி முடிந்து நடைமுறைக்கு வர பொது மக்கள் மீதமுள்ள பங்களிப்பு தொகையை விரைவாக செலுத்துமாறு சேர்மன் பாஸ்கரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.