Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சி.எம்.டி.ஏ. காலியிடங்களில் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்: தமிழக அரசு

Print PDF
தினமணி               26.05.2013

சி.எம்.டி.ஏ. காலியிடங்களில் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்: தமிழக அரசு


சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்துக்குச் சொந்தமான காலியிடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுமென வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் அறிவுறுத்தினார்.

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மறைமலைநகரில் இப்போது 32 ஏக்கர் நிலப்பரப்பில் ஏற்படுத்தப்பட்டு வரும் தொழிற்பேட்டை மனைப்பிரிவை அமைச்சர் வைத்திலிங்கம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

அப்போது, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்துக்குச் சொந்தமான காலியிடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அவற்றவும், அந்த இடங்களில் குடியிருப்பு மனைப் பிரிவுகளையும், தொழிற்பேட்டை மனைப் பிரிவுகளையும் உருவாக்கி அந்தப் பகுதியில் குடியிருப்புக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.