தமிழ் முரசு 27.05.2013
மணப்பாக்கத்தில் விதி மீறி கட்டப்பட்ட கட்டிடத்துக்கு சீல்
ஆலந்தூர்: மணப்பாக்கத்தில் விதிமுறைக்கு மாறாக கட்டிய கட்டிடத்துக்கு
மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். அங்கு கட்டிடம் கட்ட தடை
விதிக்கப்பட்டது. ஆலந்தூர் மண்டலம் 157-வது வார்டுக்கு உட்பட்ட மணப்பாக்கம்
பிரதான சாலையில் 3 அடுக்கு மாடி கட்டிடம் கட்ட பிளான் வாங்கினர். அதன்படி
கட்டாமல், இடைவெளி இன்றி 3 கட்டிடங்களையும் இணைத்து கட்டினர். விதிமுறைக்கு
மாறாக கட்டிடம் கட்டியதால் அதன் உரிமையாளருக்கு மாநகராட்சி நோட்டீஸ்
அனுப்பியது.
ஒரு மாதம் ஆகியும் கட்டிடத்தில் எந்த மாற்றமும்
செய்யவில்லை. இதையடுத்து ஆலந்தூர் மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் அன்பழகன்
உத்தரவின் பேரில் செயற்பொறி யாளர் வீரப்பன், உதவி செயற்பொறியாளர்கள் முரளி,
கிருஷ்ணமூர்த்தி, இளநிலை பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் இன்று
அந்த கட்டிடத்துக்கு சீல் வைத்தனர். அதற்கான அறிவிப்பும் ஒட்டப்பட்டது.
தொடர்ந்து கட்டுமான பணி மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது.