Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கீழ்குந்தா பேரூராட்சி பகுதியில் சாலையை அகலப்படுத்தும் பணிகள் நிறுத்தம் கலெக்டர் அதிரடி நடவடிக்கை

Print PDF
தினத்தந்தி          28.05.2013

கீழ்குந்தா பேரூராட்சி பகுதியில் சாலையை அகலப்படுத்தும் பணிகள் நிறுத்தம் கலெக்டர் அதிரடி நடவடிக்கை


கீழ்குந்தா பேரூராட்சி பகுதியில் சாலையை அகலப்படுத்துவதற்காக நடைபெற்ற காங்கிரீட் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உத்தர விட்டார்.

சாலை சீரமைக்கும் பணி

கீழ்குந்தா பேரூராட்சியின் 9-வது வார்டுக்குட்பட்ட தூனேரி, கொட்ரா கண்டி, மட்டக்கண்டி கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கிறார்கள். இப்பகுதி மக்களின் வசிதிக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு கொட்ரா கண்டி கிரா மம் முதல் மட்டகண்டி கிரா மம் வரை தார்சாலை அமைக் கப்பட்டது. தற்போது இந்த சாலைகள் மிகவும் பழுத டைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இதையடுத்து, இந்த சாலையை சீரமைக்க அப் பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட பேரூராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பேரில் கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் மலைப் பகுதி மேம்பாட்டு நிதியி¢ன் கீழ் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் முதற் கட்டமாக சாலை அகலப்படுத்தும்பணிக் காக காங்கிரீட் அமைக்கும் பணி கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தது.

பொதுமக்கள் புகார்

இந்த நிலையில் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தார் சாலை அமைக்கும் பணி தர மற்று இருப்பதாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் கூறினர்.

இதனை தொடர்ந்து கீழ் குந்தா பேரூராட்சி துணை தலைவர் போஜன், 9-வது வார்டு கவுன்சிலர் சரவணன் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது சாலை அகலப் படுத்தும் பணிக்காக அமைக் கப்பட்டு இருந்த காங்கிரீட்டு கள் தரமற்று இருப்பது தெரிய வந்தது.

பின்னர் இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சான பட்நாயக்கிற்கு கீழ்குந்தா பேரூ ராட்சி துணை தலைவர் போஜன் புகார் கொடுத்தார். இதையடுத்து, தரமில்லாமல் அமைக்கப்பட்டு வரும் காங் கிரீட் நடைபாதை களை தற் காலிகமாக நிறுத்தி வைக்க கலெக்டர் உத்தர விட்டார்.