Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாய்கள் சரணாலயம் அமைப்பதற்கான இடம்: மேயர் ஆய்வு

Print PDF

தினபூமி               29.05.2013

நாய்கள் சரணாலயம் அமைப்பதற்கான இடம்: மேயர் ஆய்வு

http://www.thinaboomi.com/sites/default/files/Saidai-Duraisamy1_0.jpg

சென்னை, மே. 29 - சென்னை 141 வது வார்டில் உள்ள கண்ணம்மாபேட்டை மயான பூமியில் நாய்கள் சரணாலயம் அமைப்பதற்கான இடத்தினை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி பொது மக்கள் நலனுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்ற தெரு நாய்கள், பராமரிப்பின்றியும், வசிப்பிடமின்றியும், வயதான நோய் தொற்றுள்ள தெரு நாய்களுக்கு சரணாலயம் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதே போல் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் இறந்த பின்பு அவைகளை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செல்லப் பிராணிகளுக்கான மாயான பூமி அமைக்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதனை செயல்படுத்தும் விதமாக கண்ணம்மாபேட்டை மயானபூமி பின்புறத்தில் 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் நாய்கள் சரணாலயம் அமைப்பதற்கும், அதன் அருகே செல்லப் பிராணிகளுக்கான மயான பூமி அமைப்பதற்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நாய்கள் சரணாலயத்தில் சுமார் 2 ஆயிரம் வசிப்பிடமற்ற வயதான மற்றும் நோயுற்ற தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் இன கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உணவு வழங்கி பராமரிக்கப்படும். நாய்கள் சரணாலயம் அமைப்பதற்கான பணியினை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என சென்னை மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார். 

இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி முதன்மை செயலாளர் ஆணையாளர் விக்ரம் கபூர், துணை ஆணையர்(சுகாதாரம்) டாக்டர் சி.என். மகேஸ்வரன், வட்டார துணை ஆணையர் பி. மகேஸ்வரி, மாநகர சுகாதார அலுவலர் டாக்டர் குகானந்தம், மண்டல குழு தலைவர் எல்.ஐ.சி. மாணிக்கம், மன்ற உறுப்பினர் ஆர். சி. ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.