Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விதிமீறல்: வணிக வளாக கட்டடத்துக்கு "சீல்'

Print PDF
தினமணி       05.06.2013

விதிமீறல்: வணிக வளாக கட்டடத்துக்கு "சீல்'


மதுரையில் விதிகளை மீறியும், அனுமதிக்கப்பட்ட பரப்பளவைக் காட்டிலும்  கூடுதல் இடத்தில் கட்டப்பட்ட 3 மாடி தனியார் வணிக வளாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை "சீல்' வைத்தனர்.

மதுரை ராஜா மில் சாலையில் வி.பாலமுருகன், வி.மகேஸ்வரன் ஆகியோர் இணைந்து தரை கீழ்தளம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய 2,981 சதுர அடி பரப்பளவில் வணிக வளாகம் கட்டுவதற்கு கட்டட வரைபட அனுமதி பெற்றிருந்தனர்.

ஆனால், அனுமதி பெறப்பட்ட பரப்பளவை விட பலமடங்கு கூடுதல் பரப்பளவில், அதாவது 6,480 சதுர அடியில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

மேலும், தரைத்தளம், முதல்தளம், இரண்டாம் தளம் மற்றும் 3-ம் தளங்கள் வரை கட்டடம் கட்டப்பட்டது.

அத்துடன், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மதில் சுவரிலிருந்து 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டடம் கட்டக் கூடாது என்ற அரசின் உத்தரவை மீறி, 12 மீட்டர் உயரம் வரை இந்த கட்டடத்தை கட்டியுள்ளனராம்.

தரை கீழ் தளத்தில் வாகனம் நிறுத்துவதற்கு அனுமதி பெற்றுவிட்டு, பண்டக சாலையாக மாற்றி வணிக உபயோகத்திற்காகவும் கட்டடப்பட்டுள்ளது.  இது தொடர்பான புகாரின்பேரில், இக் கட்டடத்தை செவ்வாய்க்கிழமை  ஆணையர் ஆர். நந்தகோபால் தலைமையில், முதன்மை நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன், உதவி ஆணையர் தேவதாஸ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேற்கண்ட விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டு, கட்டடத்துக்கு "சீல்' வைக்கப்பட்டது.