Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஈரோடு ஆர்.என்.புதூர் அம்மா உணவகத்தில் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் திடீர் ஆய்வு

Print PDF
தினத்தந்தி       05.06.2013

ஈரோடு ஆர்.என்.புதூர் அம்மா உணவகத்தில் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் திடீர் ஆய்வு


ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் திடீரென்று ஆய்வு செய்தார்.

‘அம்மா உணவகம்’

ஈரோடு மாநகராட்சியில் 10 இடங்களில் ‘அம்மா உணவகங்கள்’ தொடங்கப்பட்டு உள்ளன. இந்த உணவகங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. காலையில் உணவகங்கள் திறந்தது முதல் மூடும் வரை மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

பொதுமக்களுக்கு தரமான உணவை வழங்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

அமைச்சர் திடீர் ஆய்வு

இந்த நிலையில் நேற்று ஆர்.என்.புதூரில் உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உணவகத்துக்குள் சென்று உணவக அமைப்பை பார்வையிட்டார். மேலும் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த இட்லியை கேட்டு வாங்கி சாப்பிட்டு ருசி பார்த்தார். அப்போது அவர் இட்லி நன்றாக இருப்பதாக கூறினார்.

இந்த ஆய்வின் போது ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம், மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி, மண்டல தலைவர்கள் ரா.மனோகரன், காஞ்சனா பழனிச்சாமி, ஒன்றியக்குழு தலைவர் கண்ணம்மா முத்துசாமி, மாநகராட்சி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி ஆணையாளர் சண்முக வடிவேல், தாசில்தார் சுசீலா, ஒன்றிய ஆணையாளர் அசோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.