Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகராட்சியில் 20 பேருக்கு பணி நியமன ஆணை மேயர் செ.ம.வேலுச்சாமி வழங்கினார்

Print PDF
தினத்தந்தி         12.06.2013

கோவை மாநகராட்சியில் 20 பேருக்கு பணி நியமன ஆணை மேயர் செ.ம.வேலுச்சாமி வழங்கினார்

கோவை மாநகராட்சியில் வேலை பார்த்து பணியின்போது மரணம் அடைந்தவர்களின் வாரிசுகள் 20 பேருக்கு நேற்று பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் செ.ம.வேலுசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசும்போது, கோவை மாநகராட்சியில் இதுவரை மொத்தம் 136 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு இருந்தது. இப்போது மேலும் 20 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் மொத்தம் 156 பேர் பணி நியமன உத்தரவுகளை பெற்றுள்ளனர்.
 
கருணை அடிப்படையில் மாநகராட்சியில் பணி நியமன ஆணைபெற்றவர்கள், தங்களுடைய தாய், தந்தை எதனால் இறந்தனர் என்று உங்களுக்கு தெரியும். இதனை நினைத்து உங்களுடைய உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் லதா, துணைமேயர் லீலாவதிஉண்ணி, துணை கமிஷனர் சு.சிவராசு, மண்டல தலைவர்கள் கே.ஏ.ஆதிநாராயணன், பி.சாவித்திரி பார்த்திபன், நிலைக்குழு தலைவர் எம்.ராஜேந்திரன், கே.அர்ச்சுனன், ஆர்.சாந்தாமணி, எஸ்.தாமரை செல்வி, கவுன்சிலர் சாதிக் அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.