Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போலி பத்திரம் மூலம் விற்பனை தடுக்க பவானி நகராட்சிக்கு சொந்தமான நிலங்களில் பெயர் பலகை வைப்பு

Print PDF

தினகரன்                  17.06.2013

போலி பத்திரம் மூலம் விற்பனை தடுக்க பவானி நகராட்சிக்கு சொந்தமான நிலங்களில் பெயர் பலகை வைப்பு

பவானி, :  பவானி நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பெயர் பலகை அமைக்கப்படும் என நகராட்சித் தலைவர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

பவானி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கொட்டும் இடம், போலியான பத்திரங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புகார் கிளம்பியது. இதுகுறித்து, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள தேவூரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து தபால் மூலம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி பத்திரங்கள் தயாரித்து, நில விற்பனையில் ஈடுபட்டு மோசடி செய்த பவானி பழனிபுரத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து, அவரது மகன் கவுதம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பவானி நகராட்சிக்கு சொந்தமாக நகரின் பல்வேறு பகுதிகளில் காலியிடங்கள் உள்ளன. இவற்றிலும் முறைகேடுகள் நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால், இதுபோன்ற செயல்களைத் தடுக்கவும், பொதுமக்கள் மத்தியில் எச்சரிக்கை செய்யவும் நகராட்சி நிலங்களில் பெயர்ப்பலகை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

‘இது நகராட்சிக்கு சொந்தமான நிலம், இதில் அத்துமீறி நுழைவோர் தண்டிக்கப்படுவர்‘ என்பன போன்ற வாசகங்களுடன் நகரில் உள்ள அனைத்து நகராட்சி நிலங்களிலும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்படும் என நகராட்சித் தலைவர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.