Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்பத்தூர் பேரூராட்சிக் கூட்டம்

Print PDF

தினமணி 24.09.2009

திருப்பத்தூர் பேரூராட்சிக் கூட்டம்

திருப்பத்தூர், செப். 23: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி மன்றக் கூட்டம் புதன்கிழமை தலைவர் சாக்ளா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு செயல் அலுவலர் அமானுல்லா, துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய தலைவர் சாக்ளா, பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றும் தீர்மானத்தை அலுவலர்களோ, அதிகாரிகளோ மதிக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

செயலர் அமானுல்லா; அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

துணைத் தலைவர், கார்த்திகேயன்: வார்டு 9-ல் உள்ள தோப்புத் தெருவை வள்ளல் ரெங்கசாமி பிள்ளைத் தெரு என மாற்ற வேண்டும் என்றார்.

சோமசுந்தரம்: பூமாயி அம்மன் கோயில் ஊருணியைச் சுற்றி கம்பி வேலி அமைக்கக் கோரினார்.

யாசின்; 15-வது கல்லாகுழித் தெருவில் மண் சாலையை சிமெண்ட் சாலையாக மாற்றுமாறு கூறினார்.

சரவணப்பெருமாள்; 17-வது வார்டு அச்சுக்கட்டு குடோன் எதிரில் மழைநீர் செல்லமுடியாமல் தேங்கியுள்ளது என்றார்.

பதிகண்ணன்; தனது வார்டில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை இட மாறுதல் செய்யக் கோரினார்.

செயல் அலுவலர்; கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.

மேலும், காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் நமது பேரூராட்சியின் பங்கு தொகை ரூ. 147 லட்சம் செலுத்தப்பட வேண்டியுள்ளதால், குடிநீர்க் கட்டணத் தொகையை குடியிருப்புகளுக்கு ரூ. 50-லிருந்து 100 ஆகவும், வணிக நிறுவனங்களுக்கு ரூ. 100-லிருந்து 200 ஆக உயர்த்தவும் மற்றும் புதிய இணைப்புகளுக்கு வைப்புத்தொகை, குடியிருப்புகளுக்கு ரூ. 5000 ஆகவும், வணிக நிறுவனங்களுக்கு ரூ. 10,000 ஆகவும் உயர்த்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

Last Updated on Thursday, 24 September 2009 06:20