Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உடன்குடி பகுதியில் மோட்டார் மூலம் நீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை செயல் அலுவலர் எச்சரிக்கை

Print PDF
தினகரன்            09.07.2013

உடன்குடி பகுதியில் மோட்டார் மூலம் நீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை செயல் அலுவலர் எச்சரிக்கை


உடன்குடி, : உடன்குடி பேரூராட்சி பகுதியில் மின்மோட்டார் மூலம் குடிநீர் ஊறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயல் அலுவலர் முனியாண்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வழங்கப்படும் குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் இணைத்து குடிநீர் உறிஞ்சுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது சட்ட விரோதமான செயலாகும். பேரூராட்சி பணியாளர்கள் திடீரென வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும்போது குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் இணைத்து குடிநீர் உறிஞ்சுவது கண்டறிப்பட்டால் உடனடியாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின்மோட்டார் பறிமுதல் செய்து காவல்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.