Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

'சென்னை மாந­க­ராட்­சியை கன்­டோன்மென்ட் பின்­பற்றும்'

Print PDF
தினமலர்              10.07.2013

'சென்னை மாந­க­ராட்­சியை கன்­டோன்மென்ட் பின்­பற்றும்'


சென்னை:"மாந­க­ராட்­சியில் நடை­பெறும் பல்­வேறு மேம்‌ பாட்டு திட்­டங்­களை முன்­னு­தா­ர­ண­மாக கொண்டு, கன்­டோன்மென்ட் பகு­தி­யிலும் வளர்ச்சி பணிகள் மேற்­கொள்­ளப்­படும்," என, கன்­டோன்மென்ட் தலைமை நிர்­வாக அதி­காரி பிர­பாகர் கூறினார்.

பரங்­கி­மலை மற்றும் பல்­லா­வரம் கன்­டோன்மென்ட் கழ­கத்­திற்கு உட்­பட்ட பகு­தியில், ஏழு வார்­டுகள் உள்­ளன. இங்கு, ராணு­வத்­தினர் உட்­பட 40 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்டோர் வசிக்­கின்­றனர்.

இந்­தி­யாவில் உள்ள 62 கன்­டோன்­மென்ட்­டு­களில் சென்னை கன்­டோன்­மென்ட்டும் ஒன்று. இதில், முதல் முத­லாக ஆதார் அட்டை பெறு­வ­தற்­கான சிறப்பு முகாம், நாளை துவங்கி அடுத்த மாதம், 11ம் தேதி வரை நடக்­கி­றது. இது குறித்து, கன்­டோன்மென்ட் தலைமை நிர்­வாக அதி­காரி பிர­பாகர் கூறி­ய­தா­வது: ஆதார் அட்டை சிறப்பு முகாமில், கன்­டோன்மென்ட் பகு­தியில் உள்ள 5 வய­துக்கு மேற்­பட்ட அனை­வரும் கலந்து கொள்ள வேண்டும்.

சென்னை மாந­க­ராட்­சியில் நடை­பெறும் வளர்ச்சி திட்­டங்­களை முன்­னு­தா­ர­ண­மாக கொண்டு, கன்­டோன்மென்ட் பகு­தி­யிலும் வளர்ச்சி பணிகள் மேற்­கொள்­ளப்­படும்.

ஆக்­கி­ர­மிப்­புகள் மீட்­கப்­பட்டு, விதி­முறை மீறி கட்­டப்­பட்ட கட்­ட­டங்கள் கண்­ட­றி­யப்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். மேலும், தமி­ழக அரசு வழங்கும் நலத்­திட்­டங்கள், கன்­டோன்மென்ட் பகு­தி­வா­சி­க­ளுக்கு சென்­ற­டைய, அனைத்து நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­படும், இவ்‌வாறு அவர் கூறினார்.
Last Updated on Wednesday, 10 July 2013 11:55