Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க நகராட்சி வலியுறுத்தல்

Print PDF
தினகரன்      11.07.2013   

குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க நகராட்சி வலியுறுத்தல்


வால்பாறை, : வால்பாறை நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கை:
 நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மழை, குளிர் என சீதோஷ்ண நிலை உள்ளதால் வயிற்று போக்கு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் வர வாய்ப்புள்ளது.

அவற்றை தடுக்கவும், அவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் குடிநீரை நன்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். உணவு விடுதிகள், டீக்கடைகள் ஆகியவற்றில் வாடிக்கையாளர்களுக்கு கொதிக்க வைத்த தண்ணீரைத்தான் கொடுக்க வேண்டும். வியாபாரிகளும், பொதுமக்களும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளை விக்கும் பாலித்தீன் பைகளை தவிர்க்க வேண்டும். நகரில் சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்துக்கும் நகராட்சி எடுக்கும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை வீடுகள் மற்றும் கட்டிடங்களில் அமைக்கவேண்டும். இவ்வாறு வெங்கடாசலம் கூறியுள்ளார்.