தினகரன் 12.07.2013
நாசரேத்தில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும் பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
நாசரேத்: நாசரேத் பேரூராட்சி பகுதியில் மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று செயல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாசரேத் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலு வலர் முகம்மது இக்பால் ஷெரிப் வெளியிட்டுள்ள அறிக்கை: நாசரேத் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட ஆற்று குடிநீர் குழாய்களில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
மேலும் இப்பேரூராட்சியால் நிலத்தடி நீர் பொது குழாய்கள் மூலம் விநி யோகம் செய்யப்படும்போது அருகிலுள்ள வீடுகளில் பிளாஸ்டிக் டியூப் பொருத்தி தண்ணீர் எடுப்பவர்கள் மீது அபராதம் விதிப்பதுடன் பொது நல்லியும் அடைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.