Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நவீன பேருந்து நிழற்­கு­டைகள் திட்டம் பணி ஆணை வழங்க மாந­க­ராட்சி தயார்

Print PDF

தினமலர்        27.07.2013

நவீன பேருந்து நிழற்­கு­டைகள் திட்டம் பணி ஆணை வழங்க மாந­க­ராட்சி தயார்

சென்னை:சென்­னையில், 108 இடங்­களில் நவீன பேருந்து நிழற்­கு­டைகள் அமைக்க ஒப்­பந்தம் இறுதி செய்­யப்­பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் பணி ஆணை வழங்க மாந­க­ராட்சி தயா­ரா­கி­யுள்­ளது.

சென்­னையில் கட்­டுதல், பரா­ம­ரித்தல், ஒப்படைத்தல் முறையில் பேருந்து நிழற்­கு­டைகள் அமைக்க, தனி­யாரிடம் வர­வேற்பு இல்­லாத நிலையில், மாந­க­ராட்­சியே பேருந்து நிழற்­கு­டை­களை அமைக்க முன்­வந்­தது.

அதன்­படி, 50 கோடி ரூபாய் செலவில், 500 இடங்களில் நிழற்­கு­டைகள் அமைய உள்­ளன. முதல்­கட்ட­மாக, 108 இடங்­களில் துருப்­பி­டிக்­காத குழாய்கள் மூலம் நவீன பேருந்து நிழற்­கு­டைகள் அமைக்க, 11 கோடி ரூபாய்க்கு ஐந்து கட்­டங்­க­ளாக ஒப்­பந்தம் கோரப்­பட்­டி­ருந்­தது.

இதில் மொத்தம் நான்கு நிறு­வ­னங்கள் பங்­கேற்­றன. பல­கட்ட ஆய்­வு­க­ளுக்கு பிறகு ஒரு நிறு­வ­னத்­திற்கு பணி­களை வழங்க மாந­க­ராட்சி முடிவு செய்­துள்­ளது. இதற்­கான பணி ஆணை மாந­க­ராட்சி கூட்­டத்தில் ஒப்புதல் பெறப்­பட்டு, அடுத்த வாரம் வழங்­கப்­பட உள்ளது.

அடுத்­த­கட்­ட­மாக, 100 இடங்­களில் நவீன பேருந்து நிழற்­கு­டைகள் அமைக்க ஒப்­பந்தம் தயா­ராகி வருவதாக, மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.