Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஏழு நாளில் கட்­டட அனு­மதி மாந­க­ராட்சியில் இன்று முதல் அமல்­

Print PDF

தினமலர்             02.08.2013

ஏழு நாளில் கட்­டட அனு­மதி மாந­க­ராட்சியில் இன்று முதல் அமல்­


சென்னை:சி.எம்.டி.ஏ.,வில் இருப்­பதை போல, சென்னை மாந­க­ராட்­சி­யிலும், விண்­ணப்­பித்த ஏழு நாட்­களில், கட்­டு­மான அனு­மதி வழங்கும் பசுமை வழி திட்டம், இன்று முதல், அம­லுக்கு வரு­கி­றது.

சென்னை மாந­க­ராட்­சியில், பொது­மக்கள் அதி­க­மாக அலைந்து திரியும் பல விஷ­யங்­களில் ஒன்று, கட்­டு­மான அனு­மதி. மாந­க­ராட்சி எவ்­வ­ளவு தான் ஆன்–லைன் விண்­ணப்பம், ஒரு மாதத்தில் கட்­டட அனு­மதி பெறும் திட்டம் என, பல்­வேறு முறை­களை அமல்­ப­டுத்­தி­னாலும், கட்­டு­மான அனு­மதி கிடைப்­பதில் தொடர்ந்து தாமதம் ஏற்­பட்டு வரு­கி­றது.

இதற்கு தீர்­வாக, சி.எம்.டி.ஏ.,வில் உள்­ளதை போல, பசுமை வழியில் கட்­டட அனு­மதி வழங்கும் சிறப்பு திட்­டத்தை, மாந­க­ராட்சி இன்று முதல் அமல்­ப­டுத்­து­கி­றது. இந்த திட்­டத்தில் விண்­ணப்­பித்தால், எந்த ஆய்வும் செய்­யப்­ப­டா­ம­லேயே ஏழு நாட்­களில் கட்­டட அனு­மதி கிடைக்கும். ஆனால், அனு­மதி வழங்­கிய பின், மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் கள ஆய்வு மேற்­கொள்வர். அப்­போது விதி­மீறல் இருந்தால், கொடுத்த அனு­மதி திரும்ப பெறப்­படும். விதி­க­ளுக்கு உட்­பட்டு நடப்­ப­வர்­க­ளுக்கு இந்த முறை ஒரு வரப்­பி­ர­சா­த­மாக அமையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இது குறித்து மாந­க­ராட்சி உயர் அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:

கட்­டட அனு­மதி விஷ­யத்தில் எப்­ப­டி­யா­வது லஞ்­சத்தை ஒழிக்க வேண்டும் என்­பதே இலக்கு. இதனால் தான் பசுமை வழி திட்டம் அமல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இன்று இந்த திட்­டத்தை மேயர் துவக்கி வைக்­கிறார். விதி­களை மதிப்­ப­வர்­க­ளுக்கு இந்த முறையில் ஏழு நாட்­களில் அனு­மதி கிடைக்கும். அவர்கள் வங்கி கடன் போன்­ற­வற்றை பெற்று கட்­டு­மான பணி­களை தொட­ரலாம். இந்த முறை வர­வேற்பை பெறும் என்று எதிர்­பார்க்­கிறோம். இவ்­வாறு அந்த அதி­காரி கூறினார்.