Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போலி சான்­றிதழ் மாந­க­ராட்சி ஆசி­ரி­யர்கள் விரைவில் பணி நீக்கம் செய்ய பரி­சீ­லனை

Print PDF

தினமலர்             03.08.2013

போலி சான்­றிதழ் மாந­க­ராட்சி ஆசி­ரி­யர்கள் விரைவில் பணி நீக்கம் செய்ய பரி­சீ­லனை

சென்னை:போலி சான்­றிதழ் மூலம் பணியில் சேர்ந்த மாந­கராட்சி இடை­நிலை ஆசி­ரி­யர்கள் விரைவில் பணி நீக்கம் செய்யப்­பட உள்­ளனர். இதற்­கான நட­வ­டிக்கையில் மாந­க­ராட்சி தீவி­ர­மாக களம் இறங்­கி­யுள்­ளது.

சென்னை மாந­க­ராட்சி இடை­நிலை ஆசி­ரி­யர்கள் பலர், போலி சான்­றிதழ் மூலம் பணியில் சேர்ந்த தகவல் வெளி­யா­னது. இதுகுறித்து, மாந­க­ராட்சி விஜிலென்ஸ் அதி­கா­ரிகள் விசா­ரணை நடத்தி வந்­தனர். இந்த சம்­பவம் குறித்து, ‘தின­மலர்' நாளிதழ் விரி­வான செய்தி வெளி­யா­னது.

இதை­ய­டுத்து, சர்ச்­சையில் சிக்­கிய போலி சான்­றிதழ் ஆசி­ரி­யர்­களை பணி நீக்கம் செய்ய மாந­க­ராட்சி முடிவு செய்­துள்­ளது.

சான்­றிதழ் போலி என உறுதி செய்­யப்­பட்­டுள்ள, 10 பேரை விரைவில் பணி நீக்கம் செய்­யவும், இந்த சர்ச்சை பட்­டி­யலில் உள்ள, 126 பேர் மீதான விசா­ர­ணையை தீவிரப்­ப­டுத்­தவும் முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது.

இதில், பல ஆசி­ரி­யர்கள் விசா­ர­ணைக்கு ஒத்துழைக்க மறுப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. இதனால் அவர்கள் மீது சந்­தேகம் வலுத்­துள்­ளது. விசா­ர­ணைக்கு வர மறுக்கும் ஆசி­ரி­யர்கள் மீதும் கடு­மை­யான நட­வடிக்கை எடுக்க திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது.