தினகரன் 08.08.2013
தனியார் வசம் தெரு மின்விளக்கு பராமரிப்பு பணி
வால்பாறை:வால்பாறையில்தெரு மின்விளக்கு பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைக்க நகராட்சி தீர்மானித்துள்ளது. வால்பாறை நகராட்சியின் அவர கூட்டம், தலைவர் சத்தியவாணி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) வெங்கடாச்சலம் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நகராட்சி பகுதிகளில் புதிய தெருவிளக்கு திட்டம் செயல்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஓப்புதல் வழங்கப்பட்டது.
கடந்த மாதம் இத்திட்டத்திற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்த னர். தனியார் வசம் தெருவிளக்கு சென்றுவிட்டால், முறையாக பராமரிப்பு செய்ய இயலாத, பண விரயமாகும், வால்பாறை பகுதியில் மழை அதிக அளவு பெய்வதால் புதிய எல்,இ.டி.விளக்கு அடிக்கடி செயல் இழக்கும், எனவே இத்திட்டம் மலைப்பகுதிக்கு சரிபட்டு வராது, எல்.இ.டி தெருவிளக்கு அதிக ஒளிச்சிதறல் இல்லாமல் இருக்கும் எனவே வன விலங்குகள் ஊருக்குள் படையெடுக்கும் அபாயம் உள்ளது என கூறி, ஒப்புதல் கேட்டு வரப்பெற்ற தீர்மானத்தை நிராகரித்தனர்.